இரண்டாம் பாகமாகும் அருண்விஜய்யின் ஹிட் படம்!

இரண்டாம் பாகமாகும் அருண்விஜய்யின் ஹிட் படம்!

நடிகர் அருண் விஜய் நடித்த ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அருண் விஜய் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவான ’மாஃபியா’ என்ற திரைப்படம் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியானது. பிரியா பவானிசங்கர் நாயகியாக நடித்திருந்த இந்தப் படம் அதிரடி ஆக்ஷன் படமாக ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் அருண் விஜய் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ’மாஃபியா’ படத்தின் போட்டோஷுட் புகைப்படங்களை வெளியிட்டு தனது மலரும் நினைவுகளை பகிர்ந்தார். இந்த புகைப்படத்திற்கு பதிலளித்த இயக்குனர் கார்த்திக் நரேன் விரைவில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் சந்திப்போம் என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே நடிகர் அருண் விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன் ’மாஃபியா’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என்றும், அதுகுறித்த பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தெரிவித்திருந்தார். ’மாஃபியா’ படத்தின் இரண்டாம் பாகம் உருவானால் அதில் பிரியா பவானி சங்கர் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் கார்த்திக் நரேன் தற்போது ‘நிறங்கள் மூன்று’ என்ற படத்தை இயக்கி உள்ளார் என்பதும் இந்தப் படம் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES