சினிமாவில் இருந்து விலக போகிறேன்: அதிரடியாக பேட்டியளித்த தமிழ் ஹீரோ!

சினிமாவில் இருந்து விலக போகிறேன்: அதிரடியாக பேட்டியளித்த தமிழ் ஹீரோ!

நல்ல கேரக்டர்கள் கிடைக்காவிட்டால் சினிமாவில் இருந்து விலகப் போகிறேன் என தமிழ் ஹீரோ ஒருவர் பேட்டி அளித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஷங்கர் இயக்கிய ’பாய்ஸ்’ என்ற திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான நடிகர் சித்தார்த். அதன் பிறகு ஆயுத எழுத்து, 180, காதலில் சொதப்புவது எப்படி, உதயம், தீயா வேலை செய்யணும் குமாரு, ஜிகர்தண்டா, உள்பட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார் என்பது தெரிந்ததே.

மேலும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் மூலம் தனது கருத்தை ஆக்ரோஷமாக தெரிவித்து வருவார் என்பதும் சமீபத்தில் அவர் தெரிவித்த மொழி குறித்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் ஆளும் கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் தைரியமாக அரசியல் கருத்துக்களை முன் வைக்கும் வழக்கத்தை உடையவர் நடிகர் சித்தார்த் என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் நல்ல கேரக்டர்கள் கிடைக்கவில்லை என்றால் தான் சினிமாவில் இருந்து விலகப் போவதாக தெரிவித்துள்ளார். அவருடைய இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LATEST News

Trending News

HOT GALLERIES