உலகப்புகழ் பெற்ற கோவிலில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா: வைரல் புகைப்படம்

உலகப்புகழ் பெற்ற கோவிலில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா: வைரல் புகைப்படம்

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஆகிய இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர் என்பதும் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில் விரைவில் திருமணம் நடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் அவ்வப்போது விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் ஆன்மீக சுற்றுலா செல்வதுண்டு என்பதும் அதுகுறித்த புகைப்படங்கள் வைரலாகி வருவதும் தெரிந்ததே

இந்த நிலையில் சமீபத்தில் இருவரும் உலகப்புகழ் பெற்ற ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு சென்று உள்ளனர். இதுகுறித்த புகைப்படத்தை விக்னேஷ்சிவன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகின்றன இந்த புகைப்படத்திற்கு கேப்ஷனாக ’என் கண்மணியுடன் ஷீரடி கோவிலில் உள்ளேன். அனைத்து அழகான தருணங்களுக்காக சாய்பாபாவை சந்திக்க வந்தோம்’ என்று பதிவு செய்துள்ளார்.

இந்த நிலையில் அஜித் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகளை அவர் தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES