செல்பி எடுக்க அனுமதிக்காத நடிகை: ஆத்திரத்தில் ரசிகர்கள் செய்த மோசமான செயல்!

செல்பி எடுக்க அனுமதிக்காத நடிகை: ஆத்திரத்தில் ரசிகர்கள் செய்த மோசமான செயல்!

பிரபல நடிகை ஒருவர் செல்பி எடுக்க அனுமதிக்கவில்லை என்பதற்காக ஆத்திரத்தில் ரசிகர்கள் செய்த மோசமான செயலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தனுஷ் நடித்த ’கொடி’, அதர்வா நடித்த ’தள்ளிப்போகாதே’ உள்ளிட்ட தமிழ் படங்களிலும் ஏராளமான மலையாள படங்களிலும் நடித்தவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். தற்போது அவர் தெலுங்கிலும் சில படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் தெலுங்கானா மாநிலத்தில் கடை திறப்பு விழாவுக்கு அனுபமா பரமேஸ்வரன் சென்றிருந்தார். அவரை பார்க்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை அடுத்து கடை திறப்பு விழாவை முடித்துவிட்டு அவர் திரும்பும் போது அவருடன் செல்பி எடுக்க ரசிகர்கள் குவிந்தனர். ஆனால் ரசிகர்களை செல்பி எடுக்க அனுபமாஅனுமதிக்காமல் காரில் ஏற முயன்றார். இதனால் ஆத்திரம் அடைந்த ரசிகர்கள் அனுபமாவின் கார் டயரில் உள்ள காற்றை பிடுங்கிவிட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அனுபமாவை கடை உரிமையாளர்கள் வேறொரு காரில் அனுப்பிவைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

LATEST News

Trending News

HOT GALLERIES