அதிகாரபூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட வடிவேலுவின் அடுத்த படம்: வைரல் புகைப்படங்கள்!

அதிகாரபூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட வடிவேலுவின் அடுத்த படம்: வைரல் புகைப்படங்கள்!

வைகைப்புயல் வடிவேலு அவர்கள் கடந்த சில வருடங்களாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த நிலையில் சமீபத்தில் ’நாய் சேகர்’ என்ற திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது என்பதும் இந்த படத்தை சுராஜ் இயக்க இருப்பதாகவும் லைகா புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் சந்தோஷ் நாராயணன் இசையமைக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.

இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று செய்திகள் வெளியான நிலையில் இன்று இந்த படத்தின் பூஜை நடைபெற்று உள்ளது. சென்னையில் இன்று நடந்த பூஜையில் வடிவேலு, இயக்குனர் சுராஜ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர் என்பதும் இன்றைய பூஜை சிறப்பாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும் வடிவேலின் அடுத்த படத்தை இன்னும் ஒரு சில மாதங்களில் திரையில் பார்க்கலாம் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ‘நாய் சேகர்’ படத்தின் பூஜை குறித்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES