போதைப்பொருள் விவகாரம்: ஷாருக்கான் குடும்பத்தின் முக்கிய நபர் கைது!

போதைப்பொருள் விவகாரம்: ஷாருக்கான் குடும்பத்தின் முக்கிய நபர் கைது!

போதைப்பொருள் விவகாரத்தில் ஷாருக்கான் குடும்பத்தின் முக்கிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பாலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்று கூறப்படும் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் உள்பட ஒருசிலர் நடுக்கடலில் சொகுசு கப்பலில் நடந்த போதைப்பொருள் பார்ட்டியில் கலந்து கொண்டதாகவும், இந்த பார்ட்டியில் திரையுலக பிரபலங்கள், தொழிலதிபர்களின் வாரிசுகள் கலந்து கொண்டதாகவும் காவல்துறையினருக்கு செய்திகள் வெளியானது

இந்த செய்தியை அடுத்து காவல்துறையினர் அந்த கப்பலை சுற்றிவளைத்து சோதனை செய்தபோது கோகைன் உள்பட போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் இதனையடுத்து போதைப்பொருள் பயன்படுத்தியவர்களிடம் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இந்த கப்பலில் இருந்தவர்களில் ஒருவர் ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் என்று கூறப்பட்ட நிலையில் அவரிடமும் விசாரணை செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது வந்த தகவலின்படி போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் கைது செய்யப்பட்டதாகவும் அவருடன் சேர்ந்து 13 பேரிடம் போதை பொருள் தடுப்பு போலீசார் விசாரணை செய்து வருவதாகவும் கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LATEST News

Trending News

HOT GALLERIES