கோலிவுட் தயாரிப்பாளராகும் மலேசிய இளம்பெண்!

கோலிவுட் தயாரிப்பாளராகும் மலேசிய இளம்பெண்!

மலேசியாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கோலிவுட்டில் திரைப்பட தயாரிப்பாளராக உள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது

மலேசியாவில் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களை வெற்றிகரமாக வெளியீட்டு வந்தவர் ரீதா ராமு. குறிப்பாக கீர்த்தி சுரேஷின் ’மகாநதி’, பவன் கல்யாணின் ’வக்கீல் சாகிப்’ மகேஷ்பாபுவின் ’பாரத் அனே நினு’ உள்பட சில படங்களை அவர் மலேசியாவில் ரிலீஸ் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மலேசிய சேனலுக்கு அவர் தயாரித்த டெலி மூவி நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்திய தொலைக்காட்சிகளில் சமீபத்தில் ’பொங்குறோம் திங்குறோம்’ என்ற சமையல் நிகழ்ச்சியை தயாரித்து வெளியிட்டார் என்பதும் இந்த நிகழ்ச்சியை ரோபோ சங்கர் தொகுத்து வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது கோலிவுட் திரையுலகில் திரைப்படங்களை ரீதா ராமு தயாரிக்கவுள்ளார். தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து அவர் தயாரிக்கவுள்ள திரைப்படங்கள் குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

LATEST News

Trending News

HOT GALLERIES