ஹரி-அருண்விஜய் படத்தின் சூப்பர் அப்டேட்!

ஹரி-அருண்விஜய் படத்தின் சூப்பர் அப்டேட்!

பிரபல இயக்குனர் ஹரியின் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘அருண்விஜய் 33’ என்ற திரைப்படம் கடந்த மார்ச் மாதம் படப்பிடிப்பு தொடங்கியது என்பது தெரிந்ததே.

இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு பழனியில் நடைபெற்ற நடைபெற்ற நிலையில் திடீரென இயக்குனர் ஹரிக்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவு மற்றும் கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு ஆகியவைகளால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இன்று தொடங்கும் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களுக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அருண்விஜய் ஜோடியாக ப்ரியா பவானிசங்கர் நடிக்கும் இந்த திரைப்படத்தில் யோகிபாபு, பிரகாஷ்ராஜ், ராதிகா, அம்மு அபிராமி உள்பட பலர் நடித்து வருகின்றனர். ஜிவி பிரகாஷ் இசையில் டிரம்ஸ்டிக் புரொடக்ஷன் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த திரைப்படம் இவ்வருட இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES