'எனக்கு பயங்கர கடுப்பாயிருச்சு': இயக்குனர் பாலா குறித்து 'சேது' நாயகி பேட்டி!

'எனக்கு பயங்கர கடுப்பாயிருச்சு': இயக்குனர் பாலா குறித்து 'சேது' நாயகி பேட்டி!

கடந்த 1999ஆம் ஆண்டு பாலா இயக்கத்தில் வெளியான ‘சேது’ திரைப்படத்தை யாராலும் மறக்க முடியாது. நடிகர் விக்ரமுக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய படம் என்பதும், பாலாவுக்கு முதல் படம் என்பது மட்டுமின்றி தேசிய விருதைப் பெற்றுத் தந்த படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் நாயகியாக நடித்த நடிகை அபிதா சமீபத்தில் பேட்டியளித்த போது அந்த படத்தில் இருந்து தான் விலகிவிட ஒரு கட்டத்தில் முடிவு செய்தேன் என்று கூறியுள்ளார். இந்த பேட்டியில் அவர் மேலும் கூறியபோது, ‘இந்த படத்தின் ஒரு காட்சியில் தன்னை நடனமாட வேண்டும் என்று இயக்குனர் பாலா கூறியதாகவும் ஆனால் தனக்கு நடனம் வராததால் அனைவரும் முன்னிலையில் திட்டியதோடு ’உன்னையெல்லாம் ஹீரோயினா போட்டதற்கு என்னை செருப்பால அடிக்கணும்’ என்று கூறியது எனக்கு மிகுந்த அவமானமாக இருந்ததாகவும் கூறினார்.

இதனை அடுத்து அந்த படத்திலிருந்து விலக முடிவு செய்தேன் என்றும் ஆனால் என்னுடைய அம்மா மற்றும் சகோதரி தான் திரைப்படம் என்றால் அப்படித்தான் இருக்கும், காட்சி நன்றாக வரவேண்டும் என்பதற்காக இயக்குனர்கள் திட்டத்தான் செய்வார்கள் என்றும், சரியாக நடித்து விட்டால் ஒன்றும் பிரச்சினை இருக்காது என்றும் என்னிடம் கூறினார்கள். அதன் பின்னர் தான் நான் பாலா அவர்களிடம் மன்னிப்பு கேட்டேன் என்றும், அவர் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

‘சேது’ படத்தை அடுத்து ஒரு சில திரைப்படங்களிலும் பல சீரியல்களிலும் நடிகை அபிதா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES