அசோக்செல்வன் நடிக்கும் அடுத்த படத்தில் மூன்று நாயகிகள்!

அசோக்செல்வன் நடிக்கும் அடுத்த படத்தில் மூன்று நாயகிகள்!

தமிழ் திரையுலகின் மாஸ் நடிகர்களின் படத்தில் இரண்டு அல்லது மூன்று ஹீரோயின்கள் ஒப்பந்தம் செய்யப்படுவது கடந்த சில ஆண்டுகளாக வழக்கமாக உள்ளது. அந்த வகையில் தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகரான அசோக் செல்வன் நடிக்கும் அடுத்த படத்தில் மூன்று நாயகிகள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகின் முக்கிய இடத்தைப் பிடித்துவிட்ட அசோக் செல்வன் தற்போது ஆர்.ஏ.கார்த்திக் என்பவரின் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கி உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தில் மூன்று நாயகிகள் நடிக்க உள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரிதுவர்மா, அபர்ணா பாலமுரளி மற்றும் சிவாத்மிகா ஆகிய மூவர்தான் இந்த படத்தின் நாயகிகள் என்பது குறிப்பிடத்தக்கது. ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தில் நடித்த ரிது வர்மா ’சூரரைப்போற்று’ படத்தில் நடித்த அபர்ணா பாலமுரளி ஆகியோர் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் பிரபலம் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த மூவரில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடிப்பது யார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். வயாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவும், கோபி சுந்தர் இசையும் அந்தோணி படத்தொகுப்பு பணியிலும் ஈடுபட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அசோக் செல்வன் ஏற்கனவே ’ஹாஸ்டல்’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பதும் இந்த படம் விரைவில் ரிலீசாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES