சிம்பு-எஸ்.ஜே.சூர்யா மோதும் காட்சி: 'மாநாடு' படத்தின் மாஸ் தகவல் சொன்ன வெங்கட்பிரபு!

சிம்பு-எஸ்.ஜே.சூர்யா மோதும் காட்சி: 'மாநாடு' படத்தின் மாஸ் தகவல் சொன்ன வெங்கட்பிரபு!

சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘மாநாடு’. இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்ட நிலையில் தற்போது விறுவிறுப்பாக போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் டுவிட்டர் ஸ்பேஸில் பேசிய படக்குழுவினர் ‘மாநாடு’ படம் குறித்து பல விஷயங்களை தெரிவித்தனர். குறிப்பாக இயக்குனர் வெங்கட் பிரபு கூறிய போது ’சிம்பு மற்றும் எஸ்ஜே சூர்யா சந்திக்கும் ஒவ்வொரு காட்சியும் படத்தில் மாஸாக இருக்கும் என்றும், குறிப்பாக கிளைமாக்சில் இருவரும் மோதும் காட்சியில் ரசிகர்களை அலறவைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த படத்தில் சிம்பு மிகவும் சுறுசுறுப்பாக உள்ளார் என்றும் அவர் ஓடும் காட்சியை படமெடுக்க நாங்கள் காரில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த படத்தில் டெக்னாலஜியை வித்தியாசமான கோணத்தில் பயன்படுத்தி உள்ளதாகவும் நவீன டெக்னாலஜி அனைவருக்கும் புரியும் வகையில் எளிமையாக கூறி இருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளது இந்த படத்தின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

சிம்பு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்திருக்கும் இந்த படத்தில் எஸ்ஜே சூர்யா, எஸ்ஏ சந்திரசேகர், பாரதிராஜா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படம் வரும் ஆயுத பூஜை தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES