ஓடிடி ரிலீஸை கைவிட்ட பார்டர் படக்குழு - சந்தோஷத்தில் அருண் விஜய் ரசிகர்கள்

ஓடிடி ரிலீஸை கைவிட்ட பார்டர் படக்குழு - சந்தோஷத்தில் அருண் விஜய் ரசிகர்கள்

தமிழ் திரையுலகில் தனது வில்லத்தனமான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் அருண் விஜய்.

இவர் நடிப்பில் தற்போது பார்டர் எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. குற்றம் 23’ படத்தை அடுத்து அருண் விஜய்யும், இயக்குனர் அறிவழகனும் மீண்டும் இப்படத்திற்காக கூட்டணி அமைத்துள்ளனர்.

இப்படத்தில் நடிகைகள் ரெஜினா கசன்ட்ரா, ஸ்டெபி பட்டேல் ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடித்து இருக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வந்த சமயத்தில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டது. இதனால் இப்படத்தை ஓடிடியில் வெளியிட முடிவு செய்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.

ஆனால் தற்போது பார்டர் படத்தை ஓடிடியில் வெளியிடும் முடிவை படக்குழு கைவிட்டுள்ளதாகவும், வருகிற ஆகஸ்ட் மாதம் இப்படத்தை திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய உள்ளதாகவும் தகவல் கூறப்படுகிறது.

இந்த தகவல் அருண் விஜய் ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய சப்ரைஸ் தான்..

LATEST News

Trending News

HOT GALLERIES