சீமான் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த பகலவன் கைவிடப்பட்டது இதனால் தானா! வெளியான புதிய தகவல்

சீமான் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த பகலவன் கைவிடப்பட்டது இதனால் தானா! வெளியான புதிய தகவல்

இயக்குனர் சீமான் இயக்கத்தில் பல திரைப்படங்கள் வெளியாகியுள்ளது, குறிப்பாக இவர் இயக்கத்தில் மாதவன் நடிப்பில் வெளியான தம்பி திரைப்படம் பெரிய வரவேற்பை பெற்றது.

மேலும் சீமான் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் பகலவன் என்ற திரைப்படம் உருவாகவிருந்தது. ஆனால் சில காரணங்களால் அப்படம் கைவிடப்பட்டது.

இந்நிலையில் தற்போது தயாரிப்பாளர் தாணு அப்படம் கைவிடப்பட்டது குறித்து ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது : "ஒருமுறை சீமானைச் சந்தித்துப் பேசியபோது, அவர் ‘பகலவன்’ எனும் கதையைச் சொன்னார். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனே விஜய்யிடம், சீமான் கதை சொல்ல நேரம் வாங்கிக்கொடுத்தேன். சீமான் கதை சொன்னார்.

அதன்பின் தம்பி விஜய் எனக்கு போன் செய்து 'சார்... கதை செமையா இருக்கு. ஒவ்வொரு சீனும் தீ மாதிரி பறக்குது. ஆனா, க்ளைமாக்ஸ் மட்டும் கொஞ்சம் மாத்தணும். நீங்க அவர்கிட்ட சொல்லுங்க’’ என்றார்.

நான் சீமானிடம் ‘க்ளைமாக்ஸ் மட்டும் கொஞ்சம் மாத்தி திரும்ப தம்பியைப் பார்த்துச் சொல்லுங்க’’ என்றேன். அதன்பிறகு இரண்டு முறை விஜய்யைச் சந்தித்து சீமான் க்ளைமாக்ஸைச் சொன்னார்.

ஆனால், அந்த க்ளைமாக்ஸ் மட்டும் பிடிமானமாக வரவில்லை. இதனால் அந்தப் படம் தள்ளிப்போனது" என கூறியுள்ளார்.

LATEST News

Trending News

HOT GALLERIES