மீண்டும் களத்தில் இறங்கிய சூர்யா ரசிகர்கள்

மீண்டும் களத்தில் இறங்கிய சூர்யா ரசிகர்கள்

கொரோனா 2வது அலை காரணமாக உணவின்றி தவித்து வரும் சாலையோர மக்களுக்கு சூர்யா ரசிகர்கள் உதவி செய்து வருகிறார்கள்.

 

 

கொரோனா 2வது அலையால் இந்தியாவில் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைகளுக்கு நடிகர் சூர்யா ரசிகர்கள் உதவி வருகின்றனர்.

 

சூர்யா ரசிகர்கள்

 

கடந்த ஆண்டு ஊரடங்கில் 144 தடை உத்தரவு போடப் பட்டதிலிருந்து தொடர்ந்து சூர்யா ரசிகர்கள் 145 நாட்கள் சாலையோரம் இருக்கும் ஆதரவற்ற மக்களுக்கு உணவுகளை வழங்கினார்கள். தற்போது மீண்டும் ஊரடங்கு போடப்பட்டு இருப்பதால் சாலையோரம் இருக்கும் மக்களுக்கு உணவு வழங்க களத்தில் இறங்கியிருக்கிறார்கள். தினமும் அவர்களுக்கு ஊரடங்கு முடியும் வரை உணவுகளை வழங்க முடிவு செய்திருக்கிறார்கள்.

LATEST News

Trending News

HOT GALLERIES