இரண்டாம் திருமணம் குறித்து பேசிய நடிகை ரசித்தா.. என்ன கூறியுள்ளார் பாருங்க
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ரசித்தா. சின்னத்திரை மட்டுமின்றி தற்போது வெள்ளித்திரையிலும் தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார்.
நடிகை ரசித்தா பிரபல சின்னத்திரை நடிகர் தினேஷை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் சில பிரச்சனைகள் காரணமாக இவர்களது திருமணம் விவாகரத்தில் முடிந்தது.
இந்த நிலையில், சமீபத்திய பேட்டியில் நடிகை ரச்சிதா தனது இரண்டாம் திருமணம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
என்னைப் பற்றி அடிக்கடி ஏதாவது ஒரு வதந்தி வந்து கொண்டே தான் இருக்கும். அதேபோல் ஒவ்வொரு ஏப்ரல், மே மாதத்திலும் எனக்கு திருமணம் என்ற பேச்சு வரும், ஆனால் அது எந்த மே மாதம் என்று மட்டும் யாரும் சொல்ல மாட்டாங்க, எனக்கே தெரியவில்லை என சிரித்தபடி இரண்டாம் திருமணம் குறித்து பேசியுள்ளார்.
