ஜீவி பிரகாஷ் விவாகரத்துக்கு இது தான் காரணம்..! நடிகை திவ்யா பாரதி ஓப்பன் டாக்..!

ஜீவி பிரகாஷ் விவாகரத்துக்கு இது தான் காரணம்..! நடிகை திவ்யா பாரதி ஓப்பன் டாக்..!

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராகவும், வளர்ந்து வரும் நடிகராகவும் இருந்து வருபவர் ஜீ.வி.பிரகாஷ். 

இவர் தனது சிறு வயது தோழியும், பாடகியுமான சைந்தவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 10 வருடங்களுக்கு மேல் ஒன்றாக வாழ்ந்த இவர்கள் கடந்த வருடம் திடீரென விவாகரத்தை அறிவித்து எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினர். 

விவாகரத்துக்கு பிறகும் ஜீ.வி.பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவரும் இணைந்து கச்சேரிகளில் பங்கேற்று வருகின்றனர். ஒருபுறம், இவர்களின் பிரிவுக்கு நடிகை திவ்யபாரதி தான் காரணம் என்று சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. 

இந்நிலையில், முதன் முறையாக இது குறித்து பேட்டி ஒன்றில் ஜீ.வி.பிரகாஷ் மற்றும் திவ்யபாரதி இருவரும் மனம் திறந்து பேசியுள்ளனர். அதில் திவ்யபாரதி, "ஜீ.வி.பிரகாஷ் மற்றும் சைந்தவி விவாகரத்துக்குப் பின் என்னை பலர் டார்கெட் செய்து திட்டத் தொடங்கிவிட்டனர். 

பெண்களே அதிகம் திட்டி வருகின்றனர். அதையெல்லாம் கேட்கும்போது கடினமாக உள்ளது. நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் மட்டுமே. அதைத் தவிர்த்து வேறு ஒன்றும் இல்லை" என்று கூறியுள்ளார். 

திவ்யபாரதியின் இந்த விளக்கம், ஜீ.வி.பிரகாஷ் - சைந்தவி விவாகரத்துக்கான காரணம் குறித்து பரவி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும், ஜீ.வி.பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவரும் விவாகரத்துக்குப் பிறகும் இணைந்து பணியாற்றுவது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இது குறித்து ஜீ.வி.பிரகாஷ் கூறுகையில், "நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள். எங்கள் இருவருக்கும் இடையே எந்த மனக்கசப்பும் இல்லை. அதனால் தான் இணைந்து பணியாற்றுகிறோம்" என்று தெரிவித்தார். 

 
இந்த ஜோடியின் விவாகரத்து திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது திவ்யபாரதி அளித்த விளக்கம் பல கேள்விகளுக்கு விடை அளித்துள்ளது.

LATEST News

Trending News

HOT GALLERIES