சின்ன வயசுல எனக்கு அது நடக்கல.. இதை சொல்ல கூச்சப்படவில்லை.. நடிகை ஸ்ரீதிவ்யா கண்ணீர்..!
கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வசூல் ரீதியாக தோல்வியடைந்த திரைப்படம் மெய்யழகன்.
படத்தின் வெளியீட்டுக்கு முன்னதாக, தயாரிப்பாளர்கள் படத்தின் இசை ஆல்பத்தை வெளியிட்டனர். இந்த இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகை ஸ்ரீ திவ்யா இசையமைப்பாளர் கோவிந்த் வசந்த்தின் "அருள் மெய்" பாடலைப் புகழ்ந்து பேசினார். "அருள் மெய்" பாடல் என் உள் மனதை உருக வைத்தது. அந்த பாடலை கேட்டு அழுததாக கூறினார் ஸ்ரீதிவ்யா. "அருள் மெய் ஒரு அழகான பாடல். நான் அந்தப் பாடலை திரும்பத் திரும்ப கேட்டு, இடைவிடாமல் அழுதேன்.
அது என் குழந்தை பருவத்தையும், எனது அம்மாவையும் எனக்கு நினைவூட்டியது," என்று அவர் கூறினார்.
மேலும் அவர், "நான் நீண்ட காலமாக அந்த தூய்மையான மற்றும் உண்மையான அன்பைத் தேடிக் கொண்டிருந்தேன், துரதிர்ஷ்டவசமாக என்னுடைய சின்ன வயசுல அது எனக்கு கிடைக்கல.. நான் எதிர்பார்த்த எதுவும் நடக்கல.. என்னிடம் பாசமாக, உண்மையான அன்புடன் பேசியவர்கள் குறைவு.. உண்மையான அன்பை நான் என் சிறுவயதில் அனுபவிக்கவில்லை.
எனவே, இந்தப் பாடல் அந்த உணர்வுகளை மீண்டும் வாழ எனக்கு உதவியது. அதனால், இது எனக்கு மிகவும் சிறப்பான பாடல். மேலும் இந்த அழகான படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், என்று குறிப்பிட்டார்.
96 என்ற ப்ளாக்பஸ்டர் வெற்றி படத்தை கொடுத்த இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் வெளியான இந்த படம் விமர்சன ரீதியாக ரசிகர்களால் பாராட்டப்பட்டது.
ஆனால், படம் வெளியான நேரத்தில் எதிர்மறையான விமர்சனங்கள் மற்றும் சரியான ப்ரமோஷன் இல்லாமல் போனது படத்தை தோல்வி படமாக மாற்றியது.