இதை எப்படி புரிஞ்சிக்கிறது..? வைரலாகும் நயன்தாரா குழந்தையின் புகைப்படம்.. வெடித்த சர்ச்சை..!
நடிகை நயன்தாரா அவருடைய குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை தொடர்ந்து பல்வேறு கேள்விகளும் சர்ச்சைகளும் இந்த புகைப்படத்தை சுற்றி எழுந்திருக்கின்றன.
இயக்குனர் விக்னேஷ் இவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகர் நயன்தாரா வாடகை தாய் மூலம் இரண்டு குழந்தைகளுக்கு தாயானார். தங்களுடைய குழந்தைகளுக்கு உயிரு மற்றும் உலகு என பெயர் வைத்திருக்கின்றனர் நடிகை நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதியினர்.
இந்நிலையில், கழுத்தில் சிலுவை அணிந்தபடி இருக்கும் நடிகை நயன்தாராவின் குழந்தை உடைய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்து ரசிகர்கள் சிலர், இதை எப்படி புரிந்து கொள்வது என தெரியவில்லை..? நயன்தாரா நடிகை சமந்தா போன்ற நடிகைகள் திருப்பதி கோவிலுக்கு வருகிறார்கள்.
இது இந்துக்களுக்கு பிரச்சனையாக இல்லை. ஆனால், நயன்தாராவும், சமந்தாவும் வெளிப்படையாகவே கிறிஸ்துவத்தை பின் தொடர்பாக இருக்கிறார்கள். இதை எப்படி புரிந்து கொள்வது என்று தெரியவில்லை..? என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இந்த புகைப்படம் தற்போது தென்னிந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது. இதற்கு சக இணைய வாசிகள் தங்களுக்கு பதிலை பதிவு செய்து வருகிறார். பொதுவான இணையவாசிகள் கூறுவது என்னவென்றால், நயன்தாரா, சமந்தா போன்றோர் சினிமா துறையைச் சேர்ந்தவராக பிரபலமாக இருக்கிறார்கள்.
அவர்களுக்கு எந்த மதத்தை பின் தொடர வேண்டும் என்ற எந்த கட்டுப்பாடும் வைத்துக் கொள்வதில்லை. அவர்கள் விரும்பிய மதத்தை பின்பற்றுபவர்களுக்கு அவர்களுக்கு முழு உரிமை இருக்கிறது.
ஏன்..? ஒரே நேரத்தில் ஒருவர் இரண்டு மதத்தை பின் தொடர்வது தவறாகுமா..? நடிகை நயன்தாராவின் உண்மையான பெயர் டயானா மரியம் குரியன் என்பதும் அவர் பிறப்பால் ஒரு கிறிஸ்துவர் என்பதும் எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தானே.
அவர் விக்னேஷ் சிவன் என்ற ஒரு இந்து இயக்குனரை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். எனில், அவர் இந்துவாகவும் கிறிஸ்துவராகவும் தன்னுடைய ஆன்மீக வழக்கத்தை பின் தொடர்வதில் எந்த தவறும் இருக்கப் போவதில்லை.
ஒருவர் விரும்பினால் எந்த மதத்தை வேண்டுமானாலும் பின் தொடரலாம். அதற்கு அனைவருக்கும் உரிமை இருக்கிறது. ஆனால், ஒரு மதத்தை பின் தொடர்ந்து கொண்டு இன்னொரு மதத்தை பற்றி இழிவு படுத்தும் விதத்தில் பேசுபவர்களை தான் கண்டிக்க வேண்டுமே தவிர ஒரே நேரத்தில் வெவ்வேறு மதங்களை பின் தொடர்கிறார்கள் என்பதற்காக அவர்களை விமர்சிக்க தேவை கிடையாது.
நடிகை நயன்தாரா திருப்பதிக்கு வருவது அவருடைய நம்பிக்கை. கிறிஸ்தவத்தை பின் தொடர்வதும் அவருடைய நம்பிக்கை. இந்த இரண்டிலுமே பயணிப்பது அவருடைய உரிமை