ஒரே வீட்டில் குடும்பம் நடத்திய அன்ஷிதா, அர்னவ்!! பிக்பாஸ்-க்கு பின் மாறிப்போன வாழ்க்கை...
பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த ஆண்டு அக்டோபர் 6 ஆம் தேதி ஒளிப்பரப்பாகத் தொடங்கி 2025 ஜனவரி 19 ஆம் தேதி இரவு கிராண்ட் ஃபினாலே நடந்து முடிந்தது. பிக்பாஸ் 8ல், டைட்டில் வின்னராக முத்துக்குமரன் தேர்வு செய்யப்பட்டு ரூ. 40 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பரிசினை தட்டிச்சென்றார்.
என்னை காயப்படுத்தி அனுப்பிய ஒரு நபரின் வீட்டுக்கே சென்று, நீங்கள் என் வாழ்க்கைக்குத் தேவையில்லை என்று தைரியமாக கூறிவிட்டேன் என்றும் விஜய் டிவியில் புது பிராஜெக்ட்டில் இணைந்து ஷூட்டிங்கில் கலந்து வருவதாக அன்ஷிதா கூறியிருக்கிறார்.
இதுகுறித்து, அர்னவ், அன்ஷிதா நண்பர்களிடம் கேட்டபோது, திவ்யாவை பிரிந்த அர்னவ், அன்ஷிதாவுடன் ஒரே வீட்டில் தான் வாழ்ந்ததாகவும் விவாகரத்து வழக்குக்காக அர்னவ் வந்தபோதுகூட அவருடன் அன்ஷிதா வந்ததாகவும் கூறியிருக்கிறார்கள்.