பார்ட்டியில் இயக்குனரிடம் பட வாய்ப்பு கேட்டேன், மோசமான விஷயம்.. ஐஸ்வர்யா ராஜேஷ் வேதனை!

பார்ட்டியில் இயக்குனரிடம் பட வாய்ப்பு கேட்டேன், மோசமான விஷயம்.. ஐஸ்வர்யா ராஜேஷ் வேதனை!

ஐஸ்வர்யா ராஜேஷ், சன் தொலைக்காட்சியில் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றினார்.

அதன் பின் கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட போட்டியில் கலந்து கொண்டு தனது நடன திறமையை வெளிப்படுத்தினார். 

தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் திரைத்துறையில் பிரபல நடிகையாக வலம் வந்துகொண்டு இருக்கிறா. மேலும் தமிழ் மொழி படங்களை தாண்டி மலையாளம், தெலுங்கு மொழிகளிலும் நடித்து வருகிறார்.

அண்மையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ், சினிமாவில் ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்துள்ளார். அதில், சினிமாவில் எனக்கு சிரமமான அனுபவங்கள் நிறைய இருக்கிறது. 

10 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இயக்குநர் என்னை படத்திற்காக அழைத்தார். நானும் சென்றேன், ஆனால் என்னை பார்த்தவுடன் அவர், "இந்தப் பெண் ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக கூட இருக்க முடியாது, திருப்பி அனுப்பிவிடுங்கள்" என்று சொன்னார். ஆனால், நான் அவரது வார்த்தைகளை ஊக்கமாக எடுத்துக்கொண்டேன்.

அதே போல, மற்றொரு இயக்குநரை ஒரு பார்ட்டியில் சந்தித்தேன். அவரிடம் ஒரு ரோல் கேட்டேன், ஆனால் அவர் என்னை ரொம்பவே மோசமான கதாபாத்திரத்திற்கு தேர்ந்தெடுத்தார். அவர்களின் எண்ணம் என்னவென்று எனக்கு தெரியவில்லை என்று ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார். 

LATEST News

Trending News

HOT GALLERIES