வேண்டாம்னு விருப்பம் தெரிவிக்காத நடிகை ஜோதிகா.. சூர்யா செய்த செயல்!! பிரபல இயக்குனர் ஓப்பன் டாக்..

வேண்டாம்னு விருப்பம் தெரிவிக்காத நடிகை ஜோதிகா.. சூர்யா செய்த செயல்!! பிரபல இயக்குனர் ஓப்பன் டாக்..

தமிழ் சினிமாவில் 90ஸ் காலக்கட்டத்தில் டாப் நடிகையாக திகழ்ந்து கொடிக்கட்டி பறந்தவர் நடிகை ஜோதிகா. முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து வந்த ஜோதிகா, நடிகர் சூர்யாவுடன் காதல் வயப்பட்டு காத்திருந்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலகி, குடும்பம், குழந்தை என்று பார்த்து வந்தார்.

பிள்ளைகள் வளர்ந்த நிலையில் மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார் ஜோதிகா. சமீபத்தில், ஸ்ரீகாந்த் என்ற இந்தி படத்தில் நடித்துள்ளார். பார்வையற்ற மாற்றுத்திறனாளியான தொழிலதிபர் ஸ்ரீகாந்த் பொல்லா என்பவரின் வாழ்க்கை வரலாற்று படமாக உருவாகியுள்ளது.

ஸ்ரீகாந்த் கதாபாத்திரத்தில் நடிகர் ராஜ்குமார் ராவ் நடிக்க இப்படம் அடுத்த மாதம் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தை இயக்கிய இயக்குனர் துஷார் அளித்த பேட்டியில், ஜோதிகா ஒரு சிறந்த நடிகை.

முதலில் ஸ்ரீகாந்த் படத்தில் அவருக்கு நடிக்க விருப்பம் தெரிவிக்கவில்லை. பின் சூர்யா சார் தான் கதையை படித்து பார்த்து ஜோதிகாவை நடிக்க வைத்தார் என்று துஷார் தெரிவித்திருக்கிறார்.

LATEST News

Trending News

HOT GALLERIES