திருமணமான இயக்குனரை காதலித்த பானுப்ரியா.. இறுதியில் நடந்த கூத்து..!
தமிழ் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை பானுப்பிரியா பற்றி அதிக அளவு விஷயங்களை பகிர வேண்டிய அவசியம் இல்லை.

இவர் நடித்து வந்த காலகட்டத்தில் ரசிகர்களை தன் பக்கம் கட்டி போட வைத்துக்கொண்ட அளவு நடிப்புத்திறனை வெளிப்படுத்துவதோடு படங்களுக்குத் தேவைப்பட்டால் கவர்ச்சி காட்டி நடிக்கக்கூடிய அற்புத நடிகையாக திகழ்ந்தார்.
ஆந்திராவில் இருக்கும் ராஜமுந்திரியில் பிறந்து வளர்ந்த இவர் சுமார் 112-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். 17 வயதில் நடிக்க துவங்கிய இவரது பயணம் இன்றும் முற்றுப்பெறவில்லை.
தமிழைப் பொருத்த வரை 1983-ஆம் ஆண்டு மெல்ல பேசுங்கள் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவருக்கு தமிழில் முன்னணி நடிகர்களாக இருந்த பலரோடும் இணைந்து நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது.

இவர் ஒரு மிகச்சிறந்த நடிகை என்பதைத் தாண்டி பல விளம்பரங்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் மிகச் சிறப்பான முறையில் நடனம் ஆடக்கூடிய நடிகை இவரது நடன திறமையை நீங்கள் அழகன் திரைப்படத்தில் பார்த்து தெரிந்திருக்கலாம்.
சினிமாவில் பீக்கில் இருக்கும் போதே நடிகை பானுப்ரியா 1998-ஆம் ஆண்டு ஆதர்ஷ் கவுசல் என்ற வெளிநாட்டு தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களது மண வாழ்க்கை நல்ல முறையில் சென்று கொண்டிருந்த வேளையில் இருவருக்கும் இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு பிரிந்து விட்டார்கள். இவருக்கு அப்போது ஒரு மகள் இருந்தாள் அந்த மகளோடு சென்னை வந்து செட்டில் ஆகிவிட்டார்.
இந்நிலையில் இவர் ஆதர்ஷை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு திரை உலகில் முன்னணி மூத்த இயக்குனரான வம்சி என்பவரை காதலித்து வந்துள்ள விஷயம் தற்போது வெளி வந்துள்ளது. அந்த காதல் திருமணத்தில் முடியவில்லை என அது குறித்து இயக்குனர் வம்சி பேசிய பேச்சுக்கள் பிரபலம் ஆகி உள்ளது.
மேலும் இயக்குனர் வம்சி இயக்கிய திரைப்படங்களில் கூட பானுப்ரியா நடித்திருக்கிறார். அப்போது தான் இவர்கள் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது.
எனினும் இயக்குனர் வம்சி ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளவர் என்பதை அறிந்தும் அவரை மறக்க முடியாமல் காதலித்திருக்கிறார் நடிகை பானுப்பிரியா.
இந்நிலையில் இயக்குனர் வம்சையும் பானுப்பிரியாவுடன் தனது இரண்டாவது திருமணத்திற்கு தயார் ஆகிவிட்டதாக தெரிகிறது. இந்நிலையில் பானுப்பிரியாவின் பெற்றோர்கள் இந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. இதற்கு காரணம் ஒன்று ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகளோடு இருப்பது தான்.

இதனால் தான் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடியாமல் போன விஷயம் தற்போது அரசல் புரசலாக வெளி வந்து ரசிகர்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இந்த விஷயத்தை தெரிந்து கொண்ட ரசிகர்கள் அனைவரும் இந்த விஷயத்தை நண்பர்களுக்கு ஷேர் செய்து வருவதோடு மட்டுமல்லாமல் கண்ணழகி பானுப்பிரியா இப்படி ஒரு விஷயத்தை செய்ததை நம்ப முடியவில்லை என புலம்பி கூறியிருக்கிறார்கள்.
வேறு சில ரசிகர்களும் தற்போது தனித்து வாழ்ந்து வரும் பானுப்பிரியா ஒரு வேளை இயக்குனர் வம்சியை இரண்டாவது திருமணம் செய்து கொண்டிருந்தால், அவர் வாழ்க்கை பாதை மாறி இருக்கலாம் என்பது போன்ற அனுமான பேச்சுக்களை அவர்கள் நண்பர்களோடு இணைந்து பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.
