அம்மாடியோவ்.. குடும்ப குத்து விளக்கு விஜயலட்சுமியா இது..? மிரண்டே போன ரசிகர்கள்..!
விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சியில் மிகப்பெரிய ஒரு அறிவியல் படைப்புதான் ஆண்ட்ராய்டு போன்களும் அதில் உள்ள வாட்ஸ் அப், முகநூல், இன்ஸ்டாகிராம், டிவிட்டர் போன்ற வசதிகளும். சமூக வலைதளங்கள் என்பதே தகவல் பரிமாற்றத்தின் மற்றொரு பரிமாணம்தான்.
ஆனால் இப்போதெல்லாம் சமூக வலைதளங்கள் என்பது திரைத்துறை சார்ந்த பெண்கள் நடிப்பதற்கான இடமாக, தங்களது மேனி அழகை காட்டுவதற்கான ஒரு இடமாக மாற்றி விட்டனர்.
என்ன ஒரு மாதிரியான அற்புத விஷயத்துக்காக பயன்பட வேண்டிய இந்த சமூக வலைதள பக்கங்கள், கவர்ச்சி புத்தகங்களை போல மாறிவிட்டன என்பதுதான் கசப்பான உண்மை.
திரைப்படங்கள் எப்படியோ, சமூக வலைதள ஊடகங்களும் அப்படித்தான் இருக்கின்றன என்று மேலோட்டமாக சொன்னாலும், சினிமாவில் சம்பளம் கொடுத்து நடிப்பதற்கும், இப்படி தானாக முன்வந்து அபரிமிதமான கவர்ச்சி காட்டுவதற்கும் வித்யாசம் இருக்கிறது.
எனினும் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பிழந்த நடிகைகள் இப்படியும் வாய்ப்பு தேடலாம். இப்படியாவது ரசிகர்களை திருப்திபடுத்தலாம் என்பதற்கா கூட இந்த வழியை பின்பற்றலாம் என்று தெரிகிறது.

காதல் கோட்டை படத்தை இயக்கிய டைரக்டர் அகத்தியன் மகள் விஜயலட்சுமி. சென்னை 28 படத்தில் மிர்சி சிவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தை வெங்கட்பிரபு இயக்கி இருந்தார். அதன்பிறகு மிஷ்கின் இயக்கத்தில், அஞ்சாதே படத்தில் நரேன் ஜோடியாக நடித்திருந்தார்.
அடுத்து சரோஜா, அதே நேரம், அதே இடம், கற்றது களவு, வனயுத்தம், பிரியாணி, 2வது படம் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். சமீபத்தில் வெளியான கசடற தபற என்ற படத்திலும் ஒரு ஏழை பெண்மணி கேரக்டரில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
சன் டிவியில் நாயகி என்ற சீரியலிலும், கலைஞர் டிவியில் டும் டும் டும் என்ற சீரியலிலும் நடித்து, விஜயலட்சுமி சீரியல் ரசிகர்களின் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறார். கடந்த 2018ம் ஆண்டில் விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 2ல் விஜயலட்சுமி பங்கேற்றார்.
பெரிய டைரக்டர் மகளாக இருந்தும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக பல கட்டங்களில் முயற்சித்தும் விஜயலட்சுமியால் பெரிதாக சாதிக்க முடியவில்லை என்பதே உண்மை.

இதற்கிடையே கடந்த 2015ம் ஆண்டில் தனது பள்ளி கால தோழரான பெரோஸ் முகமதுவை விஜயலட்சுமி, காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு மகன் இருக்கிறார். விஜயலட்சுமிக்கு 2 சகோதரிகள். இதில் கார்த்திகா என்பவர் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், நிரஞ்சனி என்பவர் ஆடை வடிவமைப்பாளராகவும் இருந்து வருகிறார்.
என்னதான் இருந்தாலும் சினிமா நடிகையாக வாழ்ந்து பழகிவிட்ட பிறகு, மீண்டும் ஒரு சராசரியான வாழ்க்கைக்கு திரும்புவதா என்ற ஏக்கத்தில், தவிப்பில் இருக்கும் நடிகை விஜயலட்சுமி, தொடர்ந்து சினிமா வாய்ப்புகளை தேடிக் கொண்டே இருக்கிறார்.
அதற்காக தனது உடல் அந்தரங்க பாகங்களை பந்தி வைக்கும் விதமாக, அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை அப்டேட் செய்து, ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைக்கிறார். படம் வாய்ப்பு கிடைக்கிறதோ, இல்லையோ ரசிகர்களுக்கு விஜயலட்சுமியின் கட்டழகான மேனியை ரசிக்க இப்படி அடிக்கடி வாய்ப்பு கிடைக்கிறது.

அவரது இந்த பிளாக் கலர் டிரஸ் புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள், அம்மாடியோவ்.. குடும்ப குத்துவிளக்கு விஜயலட்சுமியா இது.. என மிரண்டே போய்விட்டனர்.
கத்திரிக்காய் முத்தி கடைவீதிக்கு வந்தாச்சு, இனி கூவி கூவி வித்துத்தானே ஆகணும் என்ற நிலையில், தன் கவர்ச்சியை இப்படி விஜயலட்சுமி போன்ற நடிகைகள் சமூக வலைதளங்களில் ஏலம் போட்டு கூவி கூவி விற்கிற அவலம்தான் இது, என்றும் ரசிகர்கள் வருத்தப்படுகின்றனர்.