நான்கு ஆண்டுகளாக வேறு ஒருவருடன் குடித்தனம்.. விவகாரத்து தர மறுக்கும் கணவர்.. பிக்பாஸ் சம்யுக்தா வேதனை..!

நான்கு ஆண்டுகளாக வேறு ஒருவருடன் குடித்தனம்.. விவகாரத்து தர மறுக்கும் கணவர்.. பிக்பாஸ் சம்யுக்தா வேதனை..!

மாடல் அழகியாக இருந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனவர் சம்யுக்தா .

இவர் பிரபல தொகுப்பாளினியான விஜே பாவனாவின் நெருங்கிய தோழி. ஆரம்பத்தில் பல்வேறு விளம்பர திரைப்படங்களில் நடித்து வந்தார்.

பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகப்பெரிய அளவில் தமிழ் மக்கள் இடையே பிரபலமானார். அதன் பிறகு பல்வேறு திரைப்பட வாய்ப்புகளும் கிடைக்க தொடங்கியது.

தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துவரும் சம்யுக்த பிரபலமான நடிகையாக தமிழ் சினிமாவில் பார்க்கப்பட்டு வருகிறார்

இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன் இருக்கிறார். அப்போது மகனுடன் எடுத்துக் கொள்ளும் சில அழகான க்யூட்டான வீடியோக்களை வெளியிடுவார் .

ஆனால் கணவர் இல்லை. ஆம் கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்து மகனுடன் தனிமையில் வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கணவரை பிரிந்ததற்கான காரணம் குறித்து பேசிய சம்யுக்தா. என் கணவர் துபாயில் வேறொரு பெண்ணுடன் 4 வருடமாக உறவில் இருந்தார்.

விஷயம் தெரிந்ததும் எனக்கு அதிர்ச்சியானது. இதனை என் நெருங்கிய தோழியான விஜே பாவனாவிடம் சொல்லி மனம் விட்டு அழுதேன்.

அந்த நேரத்தில் பாவனா எனக்கு ஆறுதல் கூறியது மட்டுமல்லாமல் அவர் தான் சிபாரிசு செய்து பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அனுப்பினார் என்று சம்யுக்தா எமோஷ்னலாக பேசியிருக்கிறார்.

கணவர் பிரிந்து சென்றபின்னர் ஏன் இரண்டாவது திருமணம் செய்துகொள்ளவில்லை என கேட்டதற்கு பதிலளித்த சம்யுக்தா,

முதல் திருமணத்திற்கே இன்னும் விவாகரத்து கிடைக்கவில்லை… தன் கணவர் வெளிநாட்டில் இருந்துகொண்டு வர மறுப்பதனால் இதுவரை விவாகரத்து பெற முடியவில்லை.

எத்தனையோ முறை கேட்டுப்பார்த்தும் அவர் செவி சாய்க்கவில்லை என மிகுந்த வேதனையுடன் கூறி இருக்கிறார் சம்யுக்தா.

LATEST News

Trending News

HOT GALLERIES