கேப்டன் விஜயகாந்த் மறைவு..! கடைசியில் பேசிய அந்த ஒரு வார்த்தை..! கண்ணீர் கடலில் ரசிகர்கள்..!

கேப்டன் விஜயகாந்த் மறைவு..! கடைசியில் பேசிய அந்த ஒரு வார்த்தை..! கண்ணீர் கடலில் ரசிகர்கள்..!

பிரபல நடிகரும் தேமுதிக கட்சியின் நிறுவனமான கேப்டன் விஜயகாந்த் சற்று முன்பு மறைந்துள்ளார்.

கடந்த இரண்டு வார காலமாக கடுமையான உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நடிகர் விஜயகாந்த் தொடர்ந்து மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், இவரை மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அழைத்து வந்த அவரது குடும்பத்தினர் கடந்த ஒரு வார காலமாக அவரை வீட்டில் வைத்து பார்த்துக் கொண்டிருந்தனர்.

இன்று அதிகாலை ஏற்பட்ட கடுமையான மூச்சுத்திணறல் காரணமாக அவரை வென்டிலேட்டரில் வைத்து சிகிச்சை கொடுத்து வந்தனர் மருத்துவர்கள்

ஆனால், சிகிச்சை பலனின்றி சற்று முன்பு மரணம் அடைந்திருக்கிறார் விஜயகாந்த். இந்நிலையில், வீட்டிலிருந்து அழைத்துச் செல்லும் பொழுது தன்னுடைய குடும்பத்தினருடன் கரகரத்து குரலில் நடிகர் விஜயகாந்த் பேசிய கடைசி வார்த்தைகள் குறித்து தகவல்கள் இணையத்தில் பரவி வருகின்றது.

கடைசியாக தன்னுடைய அவருடைய மனைவியிடம் எல்லாம் சரியாகிடும் பயப்படாதீங்க.. என்று சைகை காட்டி கூறிவிட்டு அவசர சிகிச்சை பிரிவுக்குள் சென்றிருக்கிறார் விஜயகாந்த்.

 

ஆனால், தற்பொழுது அவர் மரணமடைந்திருக்கிறார் என்ற தகவல் ஒட்டுமொத்த தமிழக மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்திருக்கின்றது.

எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் முதல் ஆளாக குரல் கொடுக்கக்கூடிய கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவு ஒட்டுமொத்த தமிழக மக்களையும் திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கின்றது.

பல ஆண்டுகளாக நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்த கேப்டன் விஜயகாந்த் படப்பிடிப்பு தளத்தில் ஒரு லைப் மேனுக்கு ஏதாவது என்றால் கூட ஓடிச் சென்று உதரக் கூடியவர்.

தன்னுடைய அலுவலகத்தில் எப்போது யார் வந்தாலும் அவர்கள் சாப்பாடு போட்டு அனுப்பக்கூடியவர் விஜயகாந்த் என்ற நினைவுகள் எல்லாம் காலம் இருக்கும் வரை இந்த உலகில் நிலைத்திருக்கும்.

LATEST News

Trending News

HOT GALLERIES