பாபநாசம் குட்டி பாப்பாவா இது? கிளாமர் புயலாக மாறிய வைரல் புகைப்படங்கள்!

பாபநாசம் குட்டி பாப்பாவா இது? கிளாமர் புயலாக மாறிய வைரல் புகைப்படங்கள்!

தமிழ், மலையாள சினிமாக்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து ரசிகர்களிடையே தற்போது பிரபலமாக இருந்துவரும் நடிகை ஒருவர் 21 வயதான நிலையில் தாறுமாறான போட்டோஷுட் புகைப்படங்களை அவ்வபோது வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள லேட்டஸ் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை எஸ்தர் அனில். இவர் தொடர்ந்து ‘நல்லவன்‘, ‘ஒருநாள் வரும்‘ போன்ற திரைப்படங்களில் நடித்த நிலையில் இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கிய ‘த்ரிஷ்யம்’ திரைப்படத்தில் நடித்து இருந்தார். அந்தப் படத்தில் கண்களாலேயே பேசி தன்னுடைய க்யூட்டான நடிப்பை வெளிப்படுத்தி இருந்ததால் தமிழில் வெளியாகிய நடிகர் கமல்ஹாசனின் ‘பாபநாசம்‘ திரைப்படத்திலும் அதேபோல தெலுங்கு ‘த்ரிஷ்யம்’ ரீமேக்கிலும் நடித்திருந்தார்.

மேலும் ‘த்ரிஷ்யம் 2‘ திரைப்படத்திலும் இடம்பெற்றிருந்த இவர் ‘த்ரிஷ்யம் 3‘ திரைப்படத்தில் வளர்ந்துவிட்ட பெரிய பெண்ணாகவும் நடிப்பில் பட்டையை கிளப்பி இருந்தார். இப்படி ‘த்ரிஷ்யம்‘ படத்திற்காக ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற நடிகை எஸ்தர் அனில் தற்போது மலையாள சினிமாக்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் படு ஆக்டிவாக செயல்பட்டு வரும் அவர் அவ்வபோது புதுப்புது போட்டோஷுட் புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில் தற்போது வெளியிட்டுள்ளா க்யூட்டான கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இதைப்பார்த்த தமிழ் ரசிகர்கள் ‘பாபநாசம்’ திரைப்படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரமா? இப்படி வளர்ந்துவிட்டாரே? என்று ஆச்சர்யத்தை வெளியிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

இவரைப் போன்றே குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சாரா அடுத்து அனிகா தற்போது எஸ்தர் அனில் என்று பலரும் வளர்ந்துவிட்ட நடிகைகளாக சோஷியல் மீடியாவில் வலம்வருவதும் அவர்களது புகைப்படங்களும் வீடியோக்களும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுவருவதும் குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES