நான் செய்த தவறை யாரும் செய்ய வேண்டாம்.. விவாகரத்துக்கு போட்டோஷூட் எடுத்த நடிகை பேட்டி..!

நான் செய்த தவறை யாரும் செய்ய வேண்டாம்.. விவாகரத்துக்கு போட்டோஷூட் எடுத்த நடிகை பேட்டி..!

கணவரிடம் இருந்து விவாகரத்து கிடைத்ததற்கு போட்டோஷூட் எடுத்து கொண்டாடிய நடிகை ஷாலினி சமீபத்தில் அளித்த பேட்டியில் நான் செய்த தவறை தயவு செய்து யாரும் செய்து விடாதீர்கள் என்று கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சீரியல் நடிகை ஷாலினி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்ய விண்ணப்பித்தார். அவருக்கு சமீபத்தில் விவாகரத்து கிடைத்த நிலையில் அதை போட்டோஷூட் எடுத்துக் கொண்டாடினார்

 

இந்த போட்டோஷூட் புகைப்படத்திற்கு எதிர்மறை கமெண்ட்கள் அதிகம் கிடைத்ததை அடுத்து அவர் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். எனது கணவர் ரியாஸை உண்மையாகவே காதலித்தேன், அவருடன் துபாய் சென்று வாழ்ந்தேன். அப்போது சின்ன சின்ன விஷயத்துக்கு எல்லாம் அவர் கை நீட்ட ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் குழந்தை பிறந்த பின்பு குழந்தையின் முன் அடித்ததால்தான் நான் திருப்பி அடித்தேன். அதன் பிறகு எங்கள் இருவருக்கும் பிரிவு ஏற்பட்டுவிட்டது. நிரந்தரமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டேன்.

எனவே தயவுசெய்து யாரும் கணவர் அடிக்கும் போது வேடிக்கை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க வேண்டாம், முதல் முறை அடிக்கும் போது தடுத்து விடுங்கள் அல்லது திருப்பி அடித்து விடுங்கள். நான் செய்த தவறை யாரும் செய்ய வேண்டாம். பெண் என்றால் இன்னொருவரிடம் அடி வாங்குவதற்காக பிறந்தவர் அல்ல என்று கூறினார்.

அதுமட்டுமின்றி திருமணம் ஆகிவிட்டது என்பதற்காக வேறு மதத்திற்கு மாறவோ அல்லது பெயரை மாற்றவோ வேண்டாம். நாம் படித்த படிப்புக்கு ஏற்ற வேலை தேடிக் கொள்ளுங்கள். கணவர் கோடீஸ்வரனாக இருந்தாலும் நமக்கென்று ஒரு வருமானம் நமக்கென்று ஒரு சேமிப்பு இருக்க வேண்டும். அதை நான் செய்யாததால் தான் இன்று கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறேன். நான் செய்த இந்த தவறை தயவு செய்து எந்த பெண்ணும் செய்ய வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

LATEST News

Trending News

HOT GALLERIES