படம் தோல்வி அடைந்ததால் சம்பளம் வேண்டாம் என கூறிய 'வாத்தி' ஹீரோயின்..!

படம் தோல்வி அடைந்ததால் சம்பளம் வேண்டாம் என கூறிய 'வாத்தி' ஹீரோயின்..!

படம் தோல்வி அடைந்ததால் தனக்கான மீதி சம்பளம் வேண்டாம் என ‘வாத்தி’ படத்தில் நாயகியாக நடித்த சம்யுக்தா மேனன் கூறியிருந்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தனுஷ் நடிப்பில் உருவான ‘வாத்தி’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படத்தில் நாயகியாக சம்யுக்தா நடித்திருந்தார் என்பதும் தெரிந்ததே. தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் இந்த படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்றும் இந்த படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த சம்யுக்தா, கடந்த 2019 ஆம் ஆண்டு தான் நடித்த ’எடக்காடு பட்டாலியன் 06’ என்ற திரைப்படம் வெற்றி பெறவில்லை என்றும் அதனால் தனக்கு 65 சதவீதம் மட்டுமே தயாரிப்பாளர் பணம் கொடுத்திருந்த நிலையில் மீறி சம்பளம் வேண்டாம் என்று கூறிவிட்டதாகவும் அப்படியே கொடுத்தாலும் நான் வாங்க மாட்டேன் என்று தெரிவித்ததாகவும் கூறியிருந்தார்.

முழு சம்பளத்தை கொடுத்தால் மட்டுமே டப்பிங் பேச வருவேன் என்று சொல்லும் நட்சத்திரங்களின் மத்தியில் சம்யுக்தா வித்தியாசமாக இருப்பதை அறிந்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் தனுஷ் உடன் நடித்த ‘வாத்தி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து சம்யுக்தா மிகுந்த மகிழ்ச்சியுடன் உள்ளார். தற்போது அவருக்கு தமிழ் திரை உலகில் வாய்ப்புகள் குவிந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES