'பொறக்கும் போதும் துரோகம் பண்ணு, இறக்கும் போதும் துரோகம் பண்ணு.. 'அகிலன்' சிங்கிள் பாடல்..!

'பொறக்கும் போதும் துரோகம் பண்ணு, இறக்கும் போதும் துரோகம் பண்ணு.. 'அகிலன்' சிங்கிள் பாடல்..!

ஜெயம் ரவி நடித்த ‘அகிலன்’ என்ற திரைப்படம் வரும் மார்ச் 10ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு அதற்கான புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

‘பூலோகம்’ திரைப்படத்தை இயக்கிய கல்யாண் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அகிலன்’ திரைப்படத்தில் ஜெயம் ரவி, பிரியா பவானி சங்கர், ஹரிஷ் உத்தமன், தன்யா ரவிச்சந்திரன் உள்பட பலர் நடித்துள்ளனர். ஜெயம் ரவி இந்த படத்தில் கடல் கொள்ளையராகவும் பிரியா பவானி சங்கர் இந்த படத்தில் காவல்துறை அதிகாரியாகவும் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

சாம் சிஎஸ் இசையில் உருவான இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் சற்று முன் இந்த படத்தின் சிங்கிள் பாடல் வெளியாகி உள்ளது. துரோகம் என்ற இந்த பாடலை சாம் சிஎஸ் மற்றும் சிவம் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர் என்பதும் இந்த பாடலை விவேக் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

’பொறக்கும்போதும் துரோகம் பண்ணு, இறக்கும்போதும் துரோகம் பண்ணு’ என்ற ஆரம்ப வரிகளில் உருவாகிய இந்த பாடல் தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES