'பத்து தல' படத்தின் அடுத்த பாகம் உருவாகிறதா?

'பத்து தல' படத்தின் அடுத்த பாகம் உருவாகிறதா?

சிம்பு நடித்த முடித்துள்ள ’பத்து தல’ என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இந்த படத்தின் போஸ்ட் புரோடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் நடிப்பில் உருவான ’முஃப்தி’ என்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக் படமான இந்த படத்தில் சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர் என்பதும் பிரியா பவானி சங்கர் நாயகியாக நடித்துள்ள இந்த படத்தை கிருஷ்ணா இயக்கி உள்ளார் என்பதும் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான ‘முஃப்தி’ திரைப்படத்தின் முந்தைய பாகத்தை உருவாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தின் இயக்குனர் நாரதன் மற்றும் நாயகன் சிவராஜ்குமார் ஆகிய இருவரும் சமீபத்தில் சந்தித்து இந்த படத்தை உறுதி செய்துள்ளதாகவும், ’பைராதிரனகல்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ போஸ்டரும் வெளியாகி வைரலாகி வருகிறது.

‘முஃப்தி’ படத்தின் ரீமேக் தான் தமிழில் உருவான 'பத்து தல’ என்பதால் ’பைராதிரனகல்’ திரைப்படமும் தமிழில் ரீமேக் செய்யப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

LATEST News

Trending News

HOT GALLERIES