'வாரிசு' படத்தை அடுத்து இளம் ஹீரோவின் அடுத்த படத்தின் சரத்குமார்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!
தளபதி விஜய் நடித்த ’வாரிசு’ திரைப்படத்தில் நடித்த சரத்குமார் அடுத்ததாக இளம் ஹீரோ ஒருவரது படத்தில் இணைந்துள்ளதாக இன்று அறியாத அறிவிக்கப்பட்டுள்ளது.
தளபதி விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் உருவான ’வாரிசு’ திரைப்படத்தில் சரத்குமார் விஜய்யின் தந்தையாக நடித்திருந்தார் என்பது அவரது நடிப்பிற்கு மிகச்சிறந்த பாசிட்டிவ் விமர்சனம் கிடைத்தது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் ’வாரிசு’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து ரசிகர்களை கவர்ந்த சரத்குமார் தற்போது இளம் ஹீரோ கௌதம் கார்த்திக் நடிக்கும் ’கிரிமினல்’ என்ற திரைப்படத்தில் இணைந்துள்ளார்.. இது குறித்து அறிவிப்பு சற்றுமுன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சாம் சிஎஸ் இசையில் உருவாகும் இந்த படத்தை தக்ஷிணாமூர்த்தி ராமர் என்பவர் இயக்க உள்ளார். பிரசன்னா ஒளிப்பதிவில் மணிகண்ட பாலாஜி படத்தொகுப்பில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பில் இன்று முதல் சரத்குமார் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.