'மாமன்னன்' படத்தை அடுத்து மாரி செல்வராஜின் அடுத்த படம்.. ஹீரோ இவர் தான்!

'மாமன்னன்' படத்தை அடுத்து மாரி செல்வராஜின் அடுத்த படம்.. ஹீரோ இவர் தான்!

உதயநிதி ஸ்டாலின் நடித்த 'மாமன்னன்’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ள இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்க இருக்கும் அடுத்த படம் குறித்த தகவல் தற்போது தெரியவந்துள்ளது.

பா ரஞ்சித் தயாரிப்பில் உருவான ’பரியேறும் பெருமாள்’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குநர் மாரி செல்வராஜ். அதன் பிறகு அவர் தனுஷ் நடித்த ’கர்ணன்’ என்ற திரைப்படத்தை இயக்கினார் என்பது இந்த இரண்டு படங்களும் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின், பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், வடிவேலு உள்ளிட்டோர் நடித்த 'மாமன்னன்’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ள மாரி செல்வராஜ் தற்போது அந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் பிஸியாக உள்ளார்.

இந்த நிலையில் மாரி செல்வராஜ் அடுத்ததாக பிரபல ஓடிடி நிறுவனத்திற்காக ஒரு திரைப்படம் இயக்க இருப்பதாகவும் இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது

டிஜிட்டலில் வெளியாக இருக்கும் இந்த படத்தில் நடிகர் கலையரசன் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

LATEST News

Trending News

HOT GALLERIES