'வாரிசு' படப்பிடிப்பில் அசிங்கப்பட்டேன்: நொந்துபோய் பேட்டியளித்த பிரபல நடிகர்!

'வாரிசு' படப்பிடிப்பில் அசிங்கப்பட்டேன்: நொந்துபோய் பேட்டியளித்த பிரபல நடிகர்!

’வாரிசு’ படத்தின் படப்பிடிப்பிற்கு வர சொல்லி தன்னை அசிங்கப்படுத்தி விட்டார்கள் என பிரபல நடிகர் ஒருவர் நொந்துபோய் பேட்டி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

தளபதி விஜய் நடித்து வரும் ’வாரிசு’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தில் ஒரு மிகப்பெரிய நட்சத்திர கூட்டமே நடித்து வருகிறது என்பதும் அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் இந்த படத்தில் ஒரு கேரக்டரில் நடிக்க ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் நடித்து வரும் ரவிச்சந்திரனிடம் ஐந்து நாள் கால்ஷீட் கேட்டுள்ளனர். அவரும் விஜய் படம் என்று மகிழ்ச்சியாக படப்பிடிப்புக்கு சென்றுள்ளார். படப்பிடிப்பின்போது மேக்கப் எல்லாம் போட்ட பிறகு திடீரென தனது உதவியாளரை அழைத்த வம்சி, அவரை போகச் சொல்லுங்கள், அவர் பார்ப்பதற்கு ரிச்சாக இருக்கின்றார், இந்த கேரக்டருக்கு சரிவர மாட்டார் என்று கூறியதாக தெரிகிறது.

இதனை உதவி இயக்குனர் தயங்கிக்கொண்டே ரவிசந்திரனிடம் கூற அவர் மிகவும் அதிர்ச்சி அடைந்து தன்னை இந்த கேரக்டருக்கு அழைத்தபோது தான் ரிச்சாக இருப்பது தெரியவில்லையா? இப்படி படப்பிடிப்புக்கு அழைத்து, மேக்கப் எல்லாம் போட்ட பின்னர் வேண்டாம் என்று கூறி அசிங்கப்படுத்துவதா? என்று நொந்துபோய் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியேற முடிவு செய்தார்.

அப்போது விஜய்யை சந்தித்து இதைக்கூற வேண்டும் என்று திட்டமிட்ட போது அவரை அழைத்து வந்த மேனேஜர் விஜய்யிடம் எல்லாம் இதைச் சொல்ல வேண்டாம், உங்களுக்கு இன்றைய நாள் சம்பளம் வந்துவிடும் என்று கெஞ்சி கேட்டு கொண்டதால் வருத்தத்துடன் வீடு திரும்பிவிட்டேன் என்று ரவிச்சந்திரன் அந்த பேட்டியில் கூறியுள்ளார். அவருடைய இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

LATEST News

Trending News

HOT GALLERIES