10ஆம் வகுப்பு படிக்கும்போது முதல் வருமானம்: சமந்தா கூறிய தொகை எவ்வளவு தெரியுமா?

10ஆம் வகுப்பு படிக்கும்போது முதல் வருமானம்: சமந்தா கூறிய தொகை எவ்வளவு தெரியுமா?

தன்னுடைய முதல் வருமானம் பத்தாம் வகுப்பு படிக்கும்போது வந்தது என்றும் அந்த தொகை எவ்வளவு என்பது குறித்தும் நடிகை சமந்தா தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். 

சமீபத்தில் வெளியான ’புஷ்பா’ என்ற திரைப் படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனம் ஆடியதற்காக நடிகை சமந்தாவுக்கு ரூபாய் 3 கோடி சம்பளம் அளிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் அதே நேரத்தில் அவர் பத்தாம் வகுப்பு படிக்கும்போது ஒரு நிகழ்ச்சியின் வரவேற்பு பெண்ணாக பணிபுரிந்ததாகவும் அந்த பணிக்காக தனக்கு 500 ரூபாய் சம்பளம் தந்ததாகவும் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

பத்தாம் வகுப்பு படிக்கும் போதே சம்பாதிக்க ஆரம்பித்து அதன் பிறகு படிப்படியாக திரையுலகில் உயர்ந்து தற்போது கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகையாக உயர்ந்து இருக்கும் சமந்தாவுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர் .

மேலும் ஒரு ரசிகர், ‘தங்களுடைய ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் நாங்கள் ஏழை எளியவர்களுக்கு உணவு கொடுக்க திட்டமிட்டுள்ளோம் என்று கூறியதற்கு அந்த ரசிகருக்கு தனது நன்றியை நடிகை சமந்தா தெரிவித்துக் கொண்டார்.

LATEST News

Trending News

HOT GALLERIES