போலீசாருக்கெல்லாம் சல்யூட்: நடிகர் சூரியின் வைரல் பதிவு!

போலீசாருக்கெல்லாம் சல்யூட்: நடிகர் சூரியின் வைரல் பதிவு!

போலீசாருக்கெல்லாம் சல்யூட் என நடிகர் சூரி சமூகவலைதளத்தில் செய்துள்ள பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

விக்ரம் பிரபு நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘டாணாக்காரன்’ என்ற திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன என்பதையும் பார்த்தோம்

அது மட்டுமின்றி சமீபத்தில் இந்த படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் விக்ரம் பிரபுவுக்கு தொலைபேசி மூலம் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார் என்றும் இது குறித்து தனது வாழ்நாள் கனவு நிறைவேறியது என விக்ரம் பிரபு தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ரஜினியை அடுத்து நடிகர் சூரி இன்று தனது சமூக வலைத்தளத்தில் ‘டாணாக்காரன்’ படக்குழுவினர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:

பெத்தவுகளுக்கு கூட பிள்ளைய அடிக்க உரிமையில்ல ஆனா போலீஸ்க்கு ஜனநாயகம் கையில் பிரம்பு தந்துருக்கு!பெத்தவரின் பொறுப்பு, வாத்தியாரின் கண்டிப்பு, நண்பனின் கனிவு ஒருசேர கடைபிடிக்கும் போலீசாருக்கெல்லாம் சல்யூட். ஆகச் சிறந்த படைப்பு

LATEST News

Trending News

HOT GALLERIES