மொட்டைத் தலையுடன் புகைப்படம் வெளியிட்ட பிரபல நடிகை… பதறிப்போன ரசிகர்கள்!

மொட்டைத் தலையுடன் புகைப்படம் வெளியிட்ட பிரபல நடிகை… பதறிப்போன ரசிகர்கள்!

தென்னிந்திய சினிமாக்களில் அறியப்படும் நடிகையாக வலம்வரும் நடிகை சஞ்சனா கல்ராணி திடீரென மொட்டைத் தலையுடன் புகைப்படம் வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பல தமிழ் திரைப்படங்களில் போல்டான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களிடையே வரவேற்பு பெற்ற நடிகையாக இருப்பவர் நடிகை நிக்கி கல்ராணி. இவர் தமிழைத் தவிர தெலுங்கு, கன்னட சினிமாக்களிலும் பிரபலமாக இருந்து வருகிறார். இவரைப் போலவே அவருடைய அக்கா சஞ்சனா கல்ராணியும் தென்னிந்திய மொழி சினிமாக்களில் அறியப்படும் நடிகையாக இருந்துவருகிறார். மேலும் தமிழில் இவர் “ஒரு காதல் செய்வீர்“ எனும் திரைப்படத்தில் நடித்தும் இருந்தார்.

இந்நிலையில் சஞ்சனா கல்ராணி கடந்த 2020 ஆம் ஆண்டு போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் ஆதாரத்துடன் சிக்கியதால் 3 மாதங்கள் சிறை தண்டனையை அனுபவித்தார். பின்னர் ஜாமீனில் வெளிவந்த இவர் அஜீஸ் பாஷா என்ற மருத்துவரைத் திருமணம் செய்துகொண்டு தற்போது 8 மாதம் கர்ப்பமாக இருந்து வருகிறார். இந்நிலையில்தான் சஞ்சனா கல்ராணி தனது தலைமுடியை எடுத்துவிட்டு மொட்டைத் தலையுடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டு உள்ளார். இவரது புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் கடும் வருத்தத்தை வெளியிட்டு வருகின்றனர்.

மேலும் தனது தோற்றம் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள சஞ்சா கல்ராணி, நான் பார்ப்பவரின் கண்களுக்கு அழகாகத் தெரிகிறேன். அதனால் நான் என் தலைமுடியை முழுவதுமாக தியாகம் செய்துவிட்டேன். பல சிரமங்களைக் கடந்து என் வாழ்க்கை மீண்டும் அழகாக இருக்கிறது. எனது வாழ்க்கையின் இந்தக் கட்டத்திற்கு என்னால் போதுமான அளவு கடவுளுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன். என் குழந்தையை வரவேற்க தயாராகி விட்டேன் என்று கேப்ஷனில் பதிவிட்டுள்ளார். இவரது பதிவைப் பார்த்த ரசிகர்கள் அவருக்கு நெகிழ்ச்சியுடன் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

LATEST News

Trending News

HOT GALLERIES