சூர்யாவின் 2டி நிறுவனத்தின் அடுத்த பட ரிலீஸ் குறித்த தகவல்!

சூர்யாவின் 2டி நிறுவனத்தின் அடுத்த பட ரிலீஸ் குறித்த தகவல்!

பிரபல நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் அடுத்த படத்தின் ரிலீஸ் தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

பிரபல நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் அமேசான் ஓடிடி நிறுவனத்திற்காக நான்கு திரைப்படங்கள் தயாரித்து கொடுப்பதாக ஒப்பந்தம் செய்து இருந்தது. இந்த ஒப்பந்தத்தின்படி ரம்யா பாண்டியனின் ‘ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்’, ஜோதிகாவின் ‘உடன்பிறப்பு’ மற்றும் சூர்யாவின் ‘ஜெய் பீம்’ ஆகிய திரைப்படங்கள் வெளியாகிய நிலையில் தற்போது அடுத்த திரைப்படமான ’ஓ மை டாக்’ என்ற திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது

’ஓ மை டாக்’ படம் டிசம்பர் மாதம் வெளியாக இருப்பதாகவும் விரைவில் சரியான ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அனேகமாக இந்த படம் கிறிஸ்மஸ் தினத்தில் வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

நடிகர் அருண்விஜய்யின் மகன் அர்னவ் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கும் இந்த படம் ஒரு சிறுவனுக்கும் அவர் வளர்க்கும் நாய்க்கும் இடையே உள்ள பாச பந்தம் தான் இந்த படத்தின் கதை என்றும் கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் விஜயகுமார் மற்றும் அருண்விஜய் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர் என்பதும், இந்த படத்தை இயக்குனர் சரவ் சண்முகம் என்பவர் இயக்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES