கார்த்திக் நரேனின் அடுத்த படத்தில் இரண்டு ஹீரோக்கள், அதில் ஒருவர் டபுள் ஆக்சன்!

கார்த்திக் நரேனின் அடுத்த படத்தில் இரண்டு ஹீரோக்கள், அதில் ஒருவர் டபுள் ஆக்சன்!

தமிழ் திரையுலகின் இளைய தலைமுறை இயக்குநர்களில் ஒருவரான கார்த்திக் நரேன் கடந்த 2016 ஆம் ஆண்டு ’துருவங்கள் பதினாறு’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன் பின்னர் அவர் இயக்கிய ’மாஃபியா’ என்ற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் விரைவில் அவர் இயக்கிய ’நரகாசுரன்’ என்ற திரைப்படம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது தனுஷ், மாளவிகா மோகன் நடித்த ’மாறன்’ என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார் என்பதும் இந்த படம் மிக விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கார்த்திக் நரேன் இயக்கும் அடுத்த திரைப்படத்தில் அதர்வா மற்றும் ரகுமான் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ரகுமான் ஏற்கனவே ’துருவங்கள் பதினாறு’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பதும் அவர் இந்த படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் மாதம் தொடங்க உள்ளதாகவும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல் விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES