திருமண தினத்தில் இயக்குனருக்கு சர்ப்ரைஸ் அளித்த சிவகார்த்திகேயன்!

திருமண தினத்தில் இயக்குனருக்கு சர்ப்ரைஸ் அளித்த சிவகார்த்திகேயன்!

தான் தயாரித்த திரைப்படத்தை இயக்கிய இயக்குனரின் திருமண தினத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் அளித்த சர்ப்பிரைஸ் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சிவகார்த்திகேயன் தயாரித்த திரைப்படங்களில் ஒன்று ’நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா’ என்பது அனைவரும் அறிந்ததே. இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை இயக்கிய இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் அவர்களுக்கு சமீபத்தில் கோவையில் திருமணம் நடந்தது.

இந்த திருமணத்திற்கு வருமாறு சிவகார்த்திகேயனுக்கு அவர் அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் ஏற்கனவே தனக்கு சில பணிகள் இருப்பதன் காரணமாக திருமணத்திற்கு வர முடியாது என்று கூறிய சிவகார்த்திகேயன், இயக்குனருக்கு தனது அட்வான்ஸ் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திருமணத்தன்று யாரும் எதிர்பாராத வகையில் திடீரென திருமணத்தில் கலந்துகொண்ட சிவகார்த்திகேயன், இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலனுக்கு தங்க செயினையும் பரிசளித்தார். சிவகார்த்திகேயனின் அன்பு மழையில் நனைந்த கார்த்திக் வேணுகோபாலன் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆச்சரியத்தில் மூழ்கினர்.

இந்த நிலையில் ’நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா’ படத்தை அடுத்து அடுத்த படத்தை இயக்க இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் தயாராகி வருகிறார் என்பதும் இந்த படம் குறித்த முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES