சூர்யாவின் ’எதற்கும் துணிந்தவன் ’பட முக்கிய அப்டேட்!

சூர்யாவின் ’எதற்கும் துணிந்தவன் ’பட முக்கிய அப்டேட்!

சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தின் புதிய அப்டேட்டை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.


இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வந்த படம் “எதற்கும் துணிந்தவன்”. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் உள்ளிட்டவை சமீபத்தில் வெளியாகி வைரலாகியது.


இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக முடிந்து விட்டதாக சமீபத்தில் இயக்குனர் பாண்டிராஜ் தெரிவித்தார்.


இந்நிலையில் இப்படத்தின் அடுத்த அப்டேட் எப்போது வரும் என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருந்த நிலையில் தற்போது இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் சன்பிக்சர்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


அதில், நாளை மதியம் 12 மணிக்கு எதற்கும் துணிந்தவன் படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகும் எனத் தெரிவித்துள்ளது. இதனால் சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

LATEST News

Trending News

HOT GALLERIES