ஜெய்பீம் படக்குழுவினருடன் எப்போதும் நான்... பிரபல இயக்குனர் அறிக்கை

ஜெய்பீம் படக்குழுவினருடன் எப்போதும் நான்... பிரபல இயக்குனர் அறிக்கை

சூர்யா நடிப்பில் வெளியாக இருக்கும் ஜெய் பீம் படம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில் இயக்குனர் அமீர் படக்குழுவினருக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜெய் பீம்'. இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பல்வேறு திரையுலக பிரபலங்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். விமர்சன ரீதியாகவும் இந்தப் படம் கொண்டாடப்பட்டு வருகிறது.

 

இப்படத்தில் வன்னியர் சமுதாயத்தை அவமதிக்கும் விதமான காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பதாகக் கூறி அது தொடர்பான அறிக்கையை பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக 'ஜெய் பீம்' படக்குழு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், ரூ.5 கோடி இழப்பீடு தர வேண்டும் என்றும் கோரி வன்னியர் சங்கம் சார்பில் வழக்கறிஞர் மூலம் நேற்று சூர்யாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

 

அமீர்

அமீர்

 

இந்நிலையில் இயக்குனர் அமீர், ஜெய் பீம் படக்குழுவினருக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், சமூகநீதியை நிலைநாட்ட வற்பறுத்தும் திரைப்படைப்புகளையும், அதை மிகுந்த சிரமத்துடன் உருவாக்கும் படைப்பாளிகளையும் காக்க வேண்டியது அரசின் கடமை மட்டுமல்ல ஒரு நல்ல சமூகத்தின் கடமையும் கூட. அந்த வகையில் “ஜெய்பீம்” படக்குழுவினருடன் எப்போதும் நான்…

 

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

LATEST News

Trending News

HOT GALLERIES