முதல் கட்டத்தை முடித்த ஷங்கர்

முதல் கட்டத்தை முடித்த ஷங்கர்

ராம் சரணை வைத்து ஷங்கர் இயக்கி வரும் திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகி வருகிறது.

ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர் படத்தில் நடித்து முடித்துள்ள நடிகர் ராம்சரண், அடுத்ததாக இயக்குனர் ஷங்கருடன் கூட்டணி அமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகும் இப்படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். 

 

இப்படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக பிரபல இந்தி நடிகை கியாரா அத்வானி நடிக்கிறார். மேலும் அஞ்சலி, ஜெயராம், சுரேஷ்கோபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

 

படக்குழுவினருடன் ஷங்கர்

படக்குழுவினருடன் ஷங்கர்

 

இந்நிலையில், முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து விட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும் படக்குழுவினருடன் ஷங்கர் இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

LATEST News

Trending News