'உச்சந்தலை ரேகையிலேயே': மிஷ்கினின் 'பிசாசு 2' பாடல் ரிலீஸ்!

'உச்சந்தலை ரேகையிலேயே': மிஷ்கினின் 'பிசாசு 2' பாடல் ரிலீஸ்!

பிரபல இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில், ஆண்ட்ரியா நடிப்பில், உருவாகிவரும் ‘பிசாசு 2’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் பாடல் ஒன்று சமூக தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

‘உச்சந்தலை ரேகையிலேயே’ என்று தொடங்கும் இந்த பாடலை கபிலன் எழுதி உள்ளார் என்பதும், கார்த்திக்ராஜா இசையமைத்து உள்ளார் என்பதும், இந்த பாடலை சித்ஸ்ரீராம் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மெலடி பாடல் இசை ரசிகர்கள் அனைவரும் கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடிக்கும் ‘பிசாசு 2’ திரைப்படத்தில் ராஜ்குமார், பூர்ணா, சந்தோஷ் பிரதாப், அஜ்மல் உள்பட பலர் நடித்துள்ளனர். மிஷ்கின் எழுத்து இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த திரைப்படத்திற்கு சிவகுமார் ஒளிப்பதிவும் கார்த்திக் ராஜா இசை அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் விரைவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

LATEST News

Trending News

HOT GALLERIES