அதிரடி ஆக்சன் ஹீரோவுடன் 3வது முறையாக இணையும் இளையதிலகம் பிரபு!
தமிழ் சினிமாவின் அதிரடி ஆக்ஷன் ஹீரோ நடிக்கும் படத்தில் இளையதிலகம் பிரபு இணைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
தமிழ் சினிமாவின் அதிரடி ஆக்ஷன் ஹீரோ விஷால் நடிக்கும் 32-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. விஷாலின் நெருங்கிய நண்பர்களான ரமணா மற்றும் நந்தா தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் நாயகியாக சுனைனா நடித்து வரும் நிலையில் தற்போது இந்த படத்தில் பிரபு ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருவதாக தகவல்கள் அறிவிக்கப்பட்டுள்ளது
இந்த தகவலை விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே விஷால் நடித்த ’தாமிரபரணி’ மற்றும் ’ஆம்பள’ ஆகிய திரைப்படங்களில் பிரபு நடித்துள்ள நிலையில் தற்போது விஷாலுடன் மூன்றாவது முறையாக இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை வினோத்குமார் என்பவர் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.