பொன்னியின் செல்வன் படத்தின் ஷூட்டிங் முடிந்ததா! நடிகர் ஜெயம் ரவி வெளியிட்ட பதிவு

பொன்னியின் செல்வன் படத்தின் ஷூட்டிங் முடிந்ததா! நடிகர் ஜெயம் ரவி வெளியிட்ட பதிவு

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் வரலாற்று திரைப்படம் தான் பொன்னியின் செல்வன்.

இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, திரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி என ஏராளமான நட்சத்திரங்களும் இப்படத்தில் நடித்து வருகிறார்கள்.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் புதிய போஸ்டர் சமீபத்தில் வெளியானது, அதில் PS-1(பொன்னியின் செல்வன்) படத்தின் முதல் பாகம் 2022-ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது நடிகர் ஜெயம் ரவி பொன்னியின் செல்வன் படத்தில் தனது பகுதி ஷூட்டிங்கை முடித்துள்ளதாக அவரின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் இப்படத்தில் பணியாற்றியது குறித்தும் இயக்குனர் மணிரத்னம் குறித்தும் அவரின் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

LATEST News

Trending News

HOT GALLERIES