சிம்புவின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் தேதி!

சிம்புவின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் தேதி!

சிம்பு நடிப்பில், இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகிய திரைப்படம் ’மாநாடு’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்ட நிலையில் வரும் ஆயுத பூஜை தினத்தில் இந்த படம் வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சிம்பு தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் ’வெந்து தணிந்தது காடு’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி சிம்பு கௌதம் கார்த்திக்குடன் ’பத்து தல’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் சிம்பு, ஹன்சிகா நடித்த ‘மஹா’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியும் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி சிம்பு நடிப்பில் இயக்குனர் கோகுல் இயக்கத்தில் உருவாக உள்ள ’கொரோனா குமார்’ என்ற படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. அனேகமாக இந்த படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 25ஆம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ‘மஞ்சப்பை’ இயக்குனர் ராகவன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ஒரு படத்தின் அறிவிப்பும் விரைவில் வரவுள்ளதாக கூறப்படுகிறது.

சிம்புவின் அடுத்தடுத்த படங்களின் அப்டேட்டுக்கள் வந்து கொண்டிருப்பது அவரது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES