5 வருடங்களுக்கு பின் மீண்டும் நடிக்க வந்த இசையமைப்பாளர்: ஹரி படத்தில் சிறப்பு தோற்றம்!

5 வருடங்களுக்கு பின் மீண்டும் நடிக்க வந்த இசையமைப்பாளர்: ஹரி படத்தில் சிறப்பு தோற்றம்!

இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பல்வேறு அவதாரங்கள் எடுத்த ஒருவர் ஐந்து வருடங்களுக்கு பின் தற்போது மீண்டும் ஹரி படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கின்றார்.

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் கங்கைஅமரன் என்பது தெரிந்ததே. இவர் இசையமைப்பது மட்டுமின்றி பாடலாசிரியராகவும், பாடகராகவும், தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி ஒருசில திரைப்படங்களில் இவர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

‘கரகாட்டக்காரன்’ படத்தில் தொடங்கி ஒருசில திரைப்படங்களில் கங்கை அமரன் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்த நிலையில் தற்போது ஹரி இயக்கும் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார். கடந்த 2016ஆம் ஆண்டு ’சென்னை 28’ இரண்டாம் பாகம் படத்தில் நடித்திருந்த கங்கை அமரன், ஐந்து வருடங்களுக்கு பின் தற்போது மீண்டும் நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காரைக்குடியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் கங்கை அமரன் ஜோதிடர் வேடத்தில் நடித்து வருகிறார். இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES