ஹரி படப்பிடிப்பில் ஏற்பட்ட பரபரப்பு: அருண்விஜய்க்கு என்ன ஆச்சு?

ஹரி படப்பிடிப்பில் ஏற்பட்ட பரபரப்பு: அருண்விஜய்க்கு என்ன ஆச்சு?

பிரபல இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ராமேஸ்வரத்தில் நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த படப்பிடிப்பில் அருண் விஜய், பிரியா பவானி சங்கர் உள்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர் என்பதும் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ராமேஸ்வரத்தில் ஒரு ஸ்டண்ட் காட்சி படமாக்கப்பட்டது என்பதும், ஸ்டண்ட் இயக்குனர் அனல் அரசுவின் இயக்கத்தில் படமாக்கப்பட்ட அந்த ஸ்டண்ட் காட்சியின்போது திடீரென அருண்விஜய்க்கு கையில் காயம் ஏற்பட்டதால் படப்பிடிப்பு குழுவினர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து ஐந்து நாட்களுக்கு அருண்விஜய் எந்தவித எடை அதிகமான பொருட்களை தூக்கக்கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இருப்பினும் அருண் விஜய் தனது பகுதியின் சண்டைக் காட்சிகளை முடித்துக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அருண் விஜய் ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடிக்கும் இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், யோகிபாபு, அம்மு அபிராமி, தலைவாசல் விஜய், உள்பட பலர் நடித்து வருகின்றனர் ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES