ஓடிடியில் பிரபுதேவாவின் அடுத்த படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

ஓடிடியில் பிரபுதேவாவின் அடுத்த படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக கடந்த சில மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டிருப்பதால் ரிலீசுக்கு தயாராகி இருக்கும் பல திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் பிரபுதேவா நடித்த அடுத்த திரைப்படமும் தற்போது ஓடிடியில் ரிலீஸ் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

பிரபுதேவா நடிப்பில் இயக்குநர் முகில் செல்லப்பன் இயக்கத்தில் உருவான திரைப்படம் ’பொன்மாணிக்கவேல்’. இந்த படம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 6ஆம் தேதி ரிலீஸ் செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. இதன்பின் ஒரு ஆண்டுக்கு பிறகு தற்போதுதான் இந்த படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது

’பொன்மாணிக்கவேல்’ திரைப்படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் விரைவில் வெளியாக இருப்பதாக இந்த படத்தின் இசையமைப்பாளர் டி.இமான் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இதனை அடுத்து இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரபுதேவா, நிவேதா பெத்துராஜ், சுரேஷ் மேனன், மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்த திரைப்படத்தில் பிரபுதேவா காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES