மனைவியுடன் இணைந்து கொரோனா பணியில் இறங்கிய சின்னத்திரை பிரபலம்

மனைவியுடன் இணைந்து கொரோனா பணியில் இறங்கிய சின்னத்திரை பிரபலம்

சின்னத்திரையில் பல தொடர்களில் நடித்து பிரபலமான அமித் பார்கவ், தனது மனைவியுடன் கொரோனா பணியில் ஈடுபட்டு வருகிறார்.

சின்னத்திரை நடிகராக அமித் பார்கவ், கல்யாணம் முதல் காதல் வரை, அச்சம் தவிர், நெஞ்சம் மறப்பதில்லை, மாப்பிள்ளை, கண்ணாடி, கண்மணி தொடர்களில் நடித்தார். ஒரு சில படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

அமித்

இவர் சின்னத்திரை தொகுப்பாளினி ஸ்ரீரஞ்சனியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் சில படங்களில் பாடியும், நடித்தும் இருக்கிறார். தற்போது இருவரும் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றுடன் இணைந்து புதுக்கோட்டை, தஞ்சாவூர் பகுதிகளில் கொரோனா மருத்துவ பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக தேவைப்படும் மருத்துவ மனைகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள், மற்றும் செறிவூட்டிகளை வாங்கி கொடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.

LATEST News

Trending News

HOT GALLERIES